Skip to main content

1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ.,

1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்
 "தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகி
றது" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.


மதுரை, தேனி உட்பட எட்டு மாவட்டங்களின் எஸ்.எஸ்.ஏ., திட்ட பொறியாளர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் திட்ட பொறியாளர் சுதாகரன், ஒருங்கிணைப்பாளர் காயத்ரி பங்கேற்றனர்.

இதில் இணை இயக்குனர் பேசியதாவது: 
மாநிலத்தில் இந்தாண்டு 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவை உட்பட கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற அடிப்படையில், 2014-15ல் ரூ.64.62 கோடியில் 1175 புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 50 சதவீத பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகளை ஜூனிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்று முடிக்க வேண்டும். இதுதொடர்பாக திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி உத்தரவின்படி கோவை, விழுப்புரம் மண்டலங்களில் ஆய்வு நடந்தது. இன்று (ஏப்.,21) திருச்சி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு