Skip to main content

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று அறிவியல் தேர்வு நடந்தது.
இதில் மொத்தம், 75 மதிப்பெண்களுக்கு, 'சாய்ஸ்' உட்பட, 53 வினாக்கள் இடம் பெற்றன; இரண்டு 'டயாக்ராம்' வினாக்களுடன், பல சுவாரஸ்யமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீர்த்தட்டுப்பாடு ஏற்படக் காரணம்; நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முறை; கிராமங்களில் அதிகம் பரவிய மற்றும் பெரும்பாலான மக்களை தாக்கிய நோய் எது என்று எலிக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா கொடுக்கப்பட்டிருந்தன; ஆதி மனிதன் தோன்றிய நாடு எது; கருப்பு வைரம் எது; மலேரியா கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவ, மாணவியர் கூறுகையில், 'வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடைகள் தெரிந்தவையாகவே இருந்தன;
பரீட்சைக்கு முறையாக தயாரான, பெரும்பாலான மாணவ, மாணவியர் சென்டம் வாங்குவோம்' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'அறிவியல் தேர்வு வினாத்தாள், 'ஈசி'யாக இருந்தது; ஏற்கனவே, கணித வினாத்தாளும் எளிதாக இருந்ததால், இரு பாடத்திலும் அதிக மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவர். இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர போட்டி ஏற்படும்' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு