Skip to main content

இ.பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்


வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை
ப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில், மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பி.எப்., கணக்கில் செலுத்தப்படும். அதற்கு இணையான தொகையை, நிறுவனம் செலுத்தும். ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற்றாலோ அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலோ, பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கு, 10.3 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும்.
ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து, பி.எப்., கணக்கில் செலுத்தப்படும் தொகை, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாயை தாண்டினால், அந்த ஊழியர் தன் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். ஊழியர்களிடம் பான் கார்டு இல்லை என்றாலோ அல்லது பான் எண்ணை குறிப்பிடவில்லை என்றாலோ, பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெற முடியாது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், உறுப்பினர்களாக உள்ளவர்களில், ஏறக்குறைய, 8.5 கோடி உறுப்பினர்களிடம் (90 சதவீதத்தினர்) பான் கார்டு இல்லை. பான் கார்டு இல்லாதவர்கள், தங்களுடைய பி.எப்., பணத்தை திரும்பப் பெறும் போது, அதிகபட்ச வருமான வரம்புக்கான, 35 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பி.எப்., பணம் பெறுபவர்களிடம் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படாது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்