Skip to main content

10 பாடங்களின் விடைத்தாள் இன்று திருத்தம்: கருணை மதிப்பெண் கிடைக்குமா?

பிளஸ் 2 தேர்வில், 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் இன்று துவங்குகிறது; இப்பணி வரும் 14ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது; கணிதம், விலங்கியல், வேதியியல் தேர்வுகளுக்
கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 8.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மொழிப்பாடங்கள் மற்றும் முதற்கட்ட முக்கியப் பாடங்களுக்கான திருத்தம், மார்ச் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. ஐந்து நாட்களாக அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால், விடைத்தாள் திருத்தம் நிறுத்தப்பட்டு இருந்தது; இன்று முதல், மீண்டும் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. மாணவர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்கும் முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், விலங்கியல், வரலாறு, வணிகக் கணிதம், உயிரியல், பொருளியல், வணிகவியல், வேதியியல் மற்றும் கணிதப் பதிவியல் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கு, விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. திருத்தப் பணிகளை, ஏப்., 14க்குள் முடிக்க, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. முக்கியப் பாடங்களைப் பொறுத்தவரை, விலங்கியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் வினாத்தாள்கள், கடினமாக இருந்ததாகவும், சில கேள்விகள் குழப்பமாக இருந்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்படும் மதிப்பீட்டு முறையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து, உரிய உத்தரவுகள் வருமா என்று, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கருணை மதிப்பெண் கிடைக்குமா என, மாணவ, மாணவியரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்