Skip to main content

வருமான வரி கட்டவில்லை என நோட்ஸ் வருகிறதா ?உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும் !


14/9/14 நாளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசின் அறிவுரை.... ☆வருமான வரி பிடித்தம் தொடர்பாக அரசு ஆணை எண் 988, நிதித்துறை, நநாள்13/12/13 ல் அனுப்பப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை எண்8/2013 நாள் 25/10/13 ன்படி மாத ஊதியம் பெறு
ம் அரசு பணியாளர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம்
செய்யப்படும் வருமானவரித் தொகை (TDS)ஒவ்வொரு மாதமும் அந்த துறை  Drawing officers TAN எண்ணைப் பயன்படுத்தி சம்பளகணக்கு அலுவலகம் கருவூலங்கள் மூலம் 24G படிவத்தில் மாதா மாதம் அனைத்து அலுவலர்களின் வருமானவரி பிடித்தத்தின் மொத்த தொகை கணக்கில் சேர்க்கப்பட்டு வருவதால் வருமானவரித்துறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிடித்தத்தொகையை அறியமுடியவில்லை. 24G ஒவ்வொரு மாதமும் புத்தக சரிக்கட்டல் (book adjustment) செய்யப்பட்டு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்டு விடுவதால் கருவூலத்திலும் கணக்கு இருப்புவைக்கப்படுவதில்லை. எனவே பணம் பெற்றுவழங்கும் அலுவலரும் (drawing officer) ஒவ்வொரு மாதத்நிற்குறிய  book identification numberஐ கருவூலத்பெதிலிருந்து பெற்று வருமான வவரித்தொகைக்கான24Q படிவத்தை வருமானவரித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் TIN Centre மூலம் ஒவ்வொரு காலாண்டும் தாக்கல்செய்து பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி சம்மந்தப்பட்ட பணியாளர்களது கணக்கில் சேர்ந்துவிட்டதை உறுதிசெய்யவேண்டியது அந்தந்த துறைசார்ர்த drawing officer கடமையாகும். இவ்வாறு ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24 Q தாக்கல் செய்யாமல் இருப்பது மற்றும் படிவம் 24G ஐ சரிபாக்காமல் படிவம் 24Q தாக்கல் செய்வது பணியாளரின் வருமானவரிக் கணக்கில் அவர்கள் பிடித்தம் செய்த தொகை சேர்க்கப்படாமல் இருக்கலாம். இந்த நிலையில் பணியாளரது வருமானவரிக்கணக்கில் பிடித்த தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என வருமானவரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்படும்.எனவே பணியாளர்கள் இவ்வாறு நோட்டீஸ் பெறப்படும் நேர்வில் பணம்பெற்று வழங்கும் அலுவலரைத் தொடர்பு கொண்டு திருத்திய 24Q படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் குறைகள் சரிசெய்யப்பட்டு அபராதத்தை தவிர்க்கலாம் என தெரிவத்துக்கொள்ளப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு