Skip to main content

PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவருக்கு பணி டிஆர்பிக்கு ஐகோர்ட் உத்தரவு


          சான்றி தழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கு ஆசிரி யர் பணி வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென டிஆர்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

             திருச்சியை சேர்ந்த சங்கர் கரிகாலன், ஐகோர்ட் மதுரை கிளை
யில் தாக்கல் செய்த மனு; தமிழ்நாடு ஆசி ரியர் தேர்வு வாரியம் நடத் திய முதுகலை வணிகவியல் ஆசிரியர் பணிக்கான தேர் வில் 2012ம் ஆண்டு நான் வெற்றி பெற்றேன். உடல் நிலை சரியில்லாத தால் சான்றிதழ் சரிபார்ப் பில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள மற்றொரு வாய் ப்பு அளிப்பதாக கூறிய டிஆர்பி எந்த தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக் கும் என்பதை தெரிவிக்க வில்லை. இது தொடர்பான வழக்கில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அழை க்க ஐகோர்ட் உத்தரவிட் டது.

          இதன்படி கடந்த 26.4. 2013ல் நடந்த சான் றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். நான் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் எது வும் தெரிவிக்கவில்லை. சான்றிதழை சரிபார்க்க ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளதாகவும், வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகே எனக்கு ஆசிரி யர் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐகோர்ட் உத்த ரவை தவ றாக புரிந்து கொண்டு எனக்கு ஆசிரியர் பணி வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, எனக்கு ஆசி ரியர் பணி வழங்க உத்தர விட வேண்டும்.இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது.

              மனுதாரர் சார்பில் வக் கீல் டி.லெனின்குமார் ஆஜ ரானார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, �ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்தது இறுதி உத்தரவு தான். ஆனால், டிஆர்பி இடைக் கால உத்தரவு எனக் கூறி மனுதாரருக்கு வேலை வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து 8 வாரத்துக்குள் டிஆர்பி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.� என உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா