Skip to main content

வாட் வரி குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி செல்போன்கள் விலை குறையும்


செல்போன்கள் மீது தமிழக அரசு 14.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரியை விதித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தடவை செல்போன் வாங்கும்போது, சில நூறு ரூபாயை மதிப்புக்கூட்டு வரியாக
செலுத்த வேண்டியுள்ளது. இது செல்போன்களின் மொத்த விலையை அதிகரிக்க செய்து விடுகிறது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏழை–எளிய மக்களும் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நவீன வசதிகள் கொண்ட செல்போன்கள் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.


ஆனால் மதிப்புக்கூட்டு வரி விதிப்பால் ஏழைகள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ஏழை–எளியவர்களும் நவீன செல்போன்களை வாங்கி பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் செல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.
அதாவது தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 9.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் செல்போன்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களின் விலை சுமார் ரூ.1000 வரை குறையும் என்று தெரிய வந்துள்ளது.

செல்போன் விலை குறையும் என்ற தகவலால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல செல்போன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் செல்போன் விற்பனையில் முதன்மை இடத்தில் இருக்கும் பிரியதர்ஷினி நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஜி.சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘செல்போன் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் நிறைய பேர் பலன் அடைவார்கள். தரம் உயர்ந்த செல்போன்களை எல்லாரும் வாங்கும் நிலை உருவாகும். இதனால் செல்போன்களின் மொத்த விற்பனையும் உயரும்’’ என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு