Skip to main content

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு


சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்
றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 புதிய துறைகள்

2015-16-ம் ஆண்டுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் வரவு-செலவுக்கு (பட்ஜெட்) ரூ.146 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.5 கோடியே 50 லட்சத்தை பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கி உள்ளது. அந்த நிதியை செலவழிக்க சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


அதுபோல சென்னை பல்கலைக்கழகத்தில் புதிதாக நீர் மேலாண்மை, உளவியல் கலந்தாய்வுத்துறை, அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கும் துறை உள்பட 4 துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அந்த துறைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதிகொடுத்த உடன் அந்த துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு துறைக்கும் ஒரு பேராசிரியர், 1 கூடுதல் பேராசிரியர், 2 விரிவுரையாளர்கள் ஆகியோர் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். மொத்தத்தில் 16 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ரூ.35 கோடி செலவு ஆகும்.

ஆன்லைன் மூலம் தேர்வு

தொலைதூர கல்வியை பொறுத்தவரை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தல், இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுதல், தேர்வு முடிவு வெளியிடுதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இணையதளமாக்கப்பட்டுள்ளன.

இனிமேல் தொலைதூர கல்வியில் ஆன்லைனில் தேர்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதனால் விடைத்தாள் தேவை இல்லை. மை கொண்டும் எழுதவேண்டியதில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு பேராசிரியர் ஆர். தாண்டவன் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு