Skip to main content

அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம்


அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலிப் பணியிடங்களில் 3000 இடங்களை நிரப்பாமல் வைத்திருக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்
தில் தாக்கல் செய்த மனு விவரம்: எங்கள் சங்க உறுப்பினர்கள் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை. தற்போது, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களை, காலியாக உள்ள பிரதான அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வயது வரம்பு, வசிப்பிட தூரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் எங்களை பணியமர்த்தவும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை பிரதான அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பிரதான அங்கன்வாடி பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பத் தடை விதித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 17 ஆயிரத்து 150 அங்கன்வாடிப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும். மேலும், 3,000 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், மீதிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கவும் பதில் மனுவில் கோரப்பட்டது.
மேலும், வயது வரம்பு, வசிப்பிடத் தொலைவு போன்ற நிபந்தனைகளை தளர்த்தி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களின் 3,000 பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும். தவிர, தற்போது குறு அங்கன்வாடி பணியாளர்களாக உள்ளவர்களும், அங்கன்வாடி பணியாளர்கள் நேரடித் தேர்வில் பங்கேற்கலாம் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு