Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க தகவல் மையம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய தகவல் மையம்
அமைக்கப்பட உள்ளது.

கடந்த, நான்கு ஆண்டு களாக புகார்களுக்கு இடமின்றி, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை கள் அமைந்துள்ளன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி.,யில் பணியாற்றும் அதிகாரிகளை மட்டுமின்றி, தலைவர், செயலர், பதிவாளர், உறுப்பினர்கள் என, பலரையும் நேரில் பார்த்து, பணி நியமனங்களுக்கு சிபாரிசு கேட்க பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும் போது, அதில் முழு விவரங்கள் இடம் பெறுவதில்லை.அதனால், தேர்வர்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு நேரில் செல்கின்றனர். நேரிலும், அவர்களால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் தேர்வர் தொடர்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதில், பல்வேறு தேர்வுப்பணி அனுபவம் பெற்றவர்களை, தேர்வர் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா