Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க தகவல் மையம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய தகவல் மையம்
அமைக்கப்பட உள்ளது.

கடந்த, நான்கு ஆண்டு களாக புகார்களுக்கு இடமின்றி, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை கள் அமைந்துள்ளன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி.,யில் பணியாற்றும் அதிகாரிகளை மட்டுமின்றி, தலைவர், செயலர், பதிவாளர், உறுப்பினர்கள் என, பலரையும் நேரில் பார்த்து, பணி நியமனங்களுக்கு சிபாரிசு கேட்க பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும் போது, அதில் முழு விவரங்கள் இடம் பெறுவதில்லை.அதனால், தேர்வர்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு நேரில் செல்கின்றனர். நேரிலும், அவர்களால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் தேர்வர் தொடர்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதில், பல்வேறு தேர்வுப்பணி அனுபவம் பெற்றவர்களை, தேர்வர் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு