Skip to main content

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு


அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நு
ட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் கோவை மண்டல திட்ட இயக்குனர் அழகிரி சாமிராஜ் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வம் அதிகம் இருந்தாலும், அவர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியிருப்பதால், அவர்களின் ஆர்வம் ஊக்குவிக்கப்படுவதில்லை. அத்தகைய மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் மாணவ, மாணவியருக்கு 'இளம் விஞ்ஞானி' என்ற விருது வழங்கப்படுகிறது; இதற்கு 5,000 ரூபாய் பரிசும் வழங்கி அரசு ஊக்குவிக்கிறது. மாநிலம் முழுக்க ஆண்டுக்கு, 10 
ஆயிரம் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் போட்டி, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகிறது. அதன் பிறகு, தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் ஐந்து பேர், ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்; இந்த வாய்ப்பை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அழகிரி சாமிராஜ் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு