Skip to main content

படிக்காதோரும் பதிவு செய்யலாம்! வேலை கிடைக்குமா; அதிகாரிகள் சொல்வது என்ன?


           'எந்த கல்வித்தகுதியும் இல்லாதோர், பிறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள்இருந்தால், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும்; ஆனால், வேலை கிடைக்கும் என, கூற முடியாது'
என்கின்றனர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்.

          தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் பதிவு செய்யாமல் விட்டோர், இம்மாதம், 7ம் தேதி வரை, பதிவை புதுப்பிக்கும் சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. புதுப்பிக்கத் தவறியோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில், 'வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்தால், துப்புரவாளர் வேலையாவது கிடைக்குமே' என, எந்த படிப்பும் இல்லாதோர் பதிவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பல்வேறு ஆவணங்கள் கேட்பதால் பதிய முடியவில்லை என, பலரும் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

படித்து விட்டு வேலை தேடுவோருக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே, வேலை வாய்ப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. பதிவு செய்ய பிறப்புச்சான்று, கல்விச்சான்று, ஜாதிச்சான்று, ரேஷன் கார்டு அவசியம். எதுவுமே படிக்காவிட்டால், ஜாதிச்சான்று, பிறப்புச்சான்று, இருப்பிடச் சான்றாக ரேஷன் கார்டு இருந்தால் பதிவு செய்யலாம். உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு; காவலாளி பணிக்கு, குறைந்த பட்சம், ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். படிப்பே இல்லாமல் பதிவு செய்யலாம்; அதனால், பெரிதாக எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ''துப்புரவுப் பணிக்கு கல்வித்தகுதி தேவையில்லை. உள்ளாட்சிகளில், சுவர்ண ஜெயந்தி பணி, தனியாரில், 'அவுட்சோர்சிங்' முறையில் துப்புரவு பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். அப்படி ஒரு பரிந்துரை கோரப்பட்டால், பரிந்துரைப் போம்'' என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு