Skip to main content

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து சாதனை

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து லண்டன் விஞ்ஞானிகள் சாதனை
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர்
. இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ள கோமா நோயாளிகள் போன்றோரின் வலியையும் இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானி ஐரின் டிரேஸி கூறும்போது "வலி, மனித உணர்ச்சிகளில் மிகவும் சிக்கலானது. இது மனிதர்களின் மற்ற செயல்பாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக கவனிப்பு திறன், பயம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றில் வலி ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே இது முக்கிய கண்டுபிடிப்பு" என்று தெரிவித்தார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.