Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு'சார்க்' நாடுகளை காண சலுகை


மத்திய அரசு ஊழியர்கள், பாகிஸ்தான் தவிர்த்து, இதர 'சார்க்' நாடுகளுக்கு, விடுப்பு பயண சலுகையில் (எல்.டி.சி.,) செல்ல அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்துவருகிறது
.
இது குறித்து பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள்
மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு, வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., மூலம், சார்க் நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.பரஸ்பர வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த, இத்திட்டம் துணை புரியும். அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, எல்.டி.சி.,யின் புதிய விதிமுறைகள்அமலுக்கு வரும்.

மோடி பிரதமரானதும், சொந்த ஊர் செல்வதற்கான எல்.டி.சி.,யில், ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை காணும் வசதியை, 2016ம் ஆண்டு செப்., 25ம் தேதி வரை நீட்டித்தார்.விமான பயணம் தொடர்பாக, எல்.டி.சி.,யை முறைகேடாக பயன்படுத்திய மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள்எம்.பி.,க்கள் ஆகியோர் மீதான புகாரை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, எல்.டி.சி., அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் வழங்கும் விமான டிக்கெட்டை அவ்வப்போது பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா