Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு'சார்க்' நாடுகளை காண சலுகை


மத்திய அரசு ஊழியர்கள், பாகிஸ்தான் தவிர்த்து, இதர 'சார்க்' நாடுகளுக்கு, விடுப்பு பயண சலுகையில் (எல்.டி.சி.,) செல்ல அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்துவருகிறது
.
இது குறித்து பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள்
மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு, வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., மூலம், சார்க் நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.பரஸ்பர வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த, இத்திட்டம் துணை புரியும். அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, எல்.டி.சி.,யின் புதிய விதிமுறைகள்அமலுக்கு வரும்.

மோடி பிரதமரானதும், சொந்த ஊர் செல்வதற்கான எல்.டி.சி.,யில், ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை காணும் வசதியை, 2016ம் ஆண்டு செப்., 25ம் தேதி வரை நீட்டித்தார்.விமான பயணம் தொடர்பாக, எல்.டி.சி.,யை முறைகேடாக பயன்படுத்திய மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள்எம்.பி.,க்கள் ஆகியோர் மீதான புகாரை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, எல்.டி.சி., அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் வழங்கும் விமான டிக்கெட்டை அவ்வப்போது பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு