Skip to main content

'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்


தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில், அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில், மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை வளர்த்துள்ளனர்.

மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநி
லை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 786 தொடக்கப் பள்ளிகள் மற்றும், 311 நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தர்மபுரி அடுத்த மூலக்காடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள், இங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம், மாணவர்கள் கல்வி கற்க தேவையான, 'சிடி'க்களை வாங்கி கொடுக்கின்றனர். இதனால், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும் கற்று, சிறந்த முறையில் தேர்வுக்கு தயாராகின்றனர்.

தலைமையாசிரியர் சண்முகம் கூறியதாவது:
வழக்கமான கரும்பலகை முறைக்கு மாறாக, 'சிடி-கம்ப்யூட்டர்' உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பாடங்களை, பாடப்பொருள்கள், எளிதில் மாணவர்களை கவரும் வகையில் கல்வி கற்பிப்பது தான், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையின் சிறப்பு. வித்தியாசமான கல்வி முறை, மாணவர்களை கவர்ந்துள்ளது. இதனால், அவர்களின் கற்கும் திறனும், கற்பித்தல் திறனும் மேம்படுகிறது. பருவ தேர்வுகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு, நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டு, அவர்களின் புகைப்படங்களுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைக்கு வைக்கிறோம். பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு