Skip to main content

கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள
தாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளித் தேர்வு மையத்தில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஆசிரியர், கணித வினாத் தாளை தனது செல்லிடப்பேசியில் படமெடுத்து கட்செவி அஞ்சல் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பினார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைதான 4 பேரையும் இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸாருக்கு ஒசூர் நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் வியாழக்கிழமை கூறியதாவது:
கைதான 4 ஆசிரியர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, அதன் பிறகு கிடைக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இரண்டு நாள்கள் போலீஸ் விசாரணை முடிந்ததையடுத்து, கைதான 4 ஆசிரியர்களும், ஒசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நீதித் துறை நடுவர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு