Skip to main content

கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள
தாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளித் தேர்வு மையத்தில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஆசிரியர், கணித வினாத் தாளை தனது செல்லிடப்பேசியில் படமெடுத்து கட்செவி அஞ்சல் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பினார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைதான 4 பேரையும் இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸாருக்கு ஒசூர் நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் வியாழக்கிழமை கூறியதாவது:
கைதான 4 ஆசிரியர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, அதன் பிறகு கிடைக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இரண்டு நாள்கள் போலீஸ் விசாரணை முடிந்ததையடுத்து, கைதான 4 ஆசிரியர்களும், ஒசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நீதித் துறை நடுவர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா