Skip to main content

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை


கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை
என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடவுச்சீட்டு பெற தங்களது பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்புச் சான்று உள்பட இதர கல்வி தொடர்பான சான்றுகளை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்தச் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களில் அளித்துள்ளதால் கடவுச்சீட்டுக்காக அவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் இருந்து, ஒரு சான்றிதழை அளிக்க வேண்டும். அதாவது, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்தான் பயில்கிறார்கள் எனவும், அவர்களது அசல் சான்றுகள் கல்வி நிறுவனத்தின் வசம் உள்ளது என்றும் குறிப்பிட்டு சான்று பெறப்பட வேண்டும். அசல் சான்றிதழ்களின் நகல்களை, தொடர்புடைய கல்வி நிறுவன அதிகாரியின் சான்றொப்பத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட உரிய அடையாள அட்டையின் நகலையும் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் பூர்த்தி செய்தால், அசல் சான்றிதழ்களை மாணவர்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
வங்கிக் கணக்குப் புத்தகம்: கடவுச்சீட்டுக்கான ஆவணங்களில் ஒன்றாக வங்கிக் கணக்குப் புத்தகமும் உள்ளது. அந்த வங்கிகளின் வரிசையில் இப்போது "ஷெட்யூல்' பொதுத் துறை வங்கிகள், ஷெட்யூல் தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
கடவுச்சீட்டு சேவை தொடர்பாக ஏதேனும் விவரங்கள் பெற வேண்டுமெனில் 17 மொழிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத தொலைபேசி சேவையை (1800-258-1800) பயன்படுத்தலாம்.
மேலும், டுவிட்டர் (RpoChennai) கணக்கிலும், முகநூலிலும் (Regional Passport Office Chennai) தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா