Skip to main content

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை


கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை
என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடவுச்சீட்டு பெற தங்களது பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்புச் சான்று உள்பட இதர கல்வி தொடர்பான சான்றுகளை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்தச் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களில் அளித்துள்ளதால் கடவுச்சீட்டுக்காக அவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் இருந்து, ஒரு சான்றிதழை அளிக்க வேண்டும். அதாவது, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்தான் பயில்கிறார்கள் எனவும், அவர்களது அசல் சான்றுகள் கல்வி நிறுவனத்தின் வசம் உள்ளது என்றும் குறிப்பிட்டு சான்று பெறப்பட வேண்டும். அசல் சான்றிதழ்களின் நகல்களை, தொடர்புடைய கல்வி நிறுவன அதிகாரியின் சான்றொப்பத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட உரிய அடையாள அட்டையின் நகலையும் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் பூர்த்தி செய்தால், அசல் சான்றிதழ்களை மாணவர்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
வங்கிக் கணக்குப் புத்தகம்: கடவுச்சீட்டுக்கான ஆவணங்களில் ஒன்றாக வங்கிக் கணக்குப் புத்தகமும் உள்ளது. அந்த வங்கிகளின் வரிசையில் இப்போது "ஷெட்யூல்' பொதுத் துறை வங்கிகள், ஷெட்யூல் தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
கடவுச்சீட்டு சேவை தொடர்பாக ஏதேனும் விவரங்கள் பெற வேண்டுமெனில் 17 மொழிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத தொலைபேசி சேவையை (1800-258-1800) பயன்படுத்தலாம்.
மேலும், டுவிட்டர் (RpoChennai) கணக்கிலும், முகநூலிலும் (Regional Passport Office Chennai) தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு