Skip to main content

கல்வி நிறுவன மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பு


கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ ஆலோசனை தேவைப்பட்டால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆலோசகரை அணுக வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. பல்கலைகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், த
னியார் கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவ வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த டிசம்பரில், யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இக்கடித விவரம்:
கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்பு களை நிறுவுவதற்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் காலியிடங்களில், இந்த அமைப்பை நிறுவ விரும்பும் கல்வி நிறுவனங்கள், மத்திய நவீன மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின், ஆலோசகர் என்.பி.சிங்கை, 011-2436 2288 என்ற தொலைபேசி எண் அல்லது npsinghmnes@nic.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இந்த தகவலை, அனைத்து அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்