மதுரை: இரவில் பல் துலக்கும் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இப்பழக்கம் குறித்த கூட்டம் மதுரை நளா பல் மருத்துவமனையில் ந
டந்தது. இயக்குனர் நளாயினி வரவேற்றார். டாக்டர் அனுஷா தலைமை வகித்தார். டாக்டர் கண்ணபெருமான் பேசுகையில், "2020ல் பல் சொத்தை பிரச்னை பிரதானமாக இருக்கும். தினமும் இரவு பல் துலக்குவதால் 30 சதவீதம் பல் சொத்தையாகுவதை தடுக்கலாம்" என்றார்.
கலெக்டர் பேசுகையில், "சமீபகாலமாக நானே இரவு பல் துலக்கி வருகிறேன். இதேபோல் அனைவரும் அப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பள்ளி அளவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.