Skip to main content

கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் : தொடக்ககல்வி இயக்ககம் அறிவிப்பு


கபீர் புரஸ்கார்' விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்து, தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிறர் உயிரை காப்பாற்றியவர்கள், வீரதீர செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய
அரசு சார்பில், 'கபீர் புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த விருதுக்கான, விண்ணப்பங்கள் பெறுவது குறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:'கபீர் புரஸ்கார்2015 விருதுக்கு தகுதியான விண்ணப்பங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்கள் பரிந்துரையுடன், அரசுக்கு அனுப்ப வேண்டும். பரிந்துரைக்க விண்ணப்பங்கள் இல்லாவிடில், 'இன்மை' அறிக்கை தயார் செய்து, உடனடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்தவர்களின் திறமை மற்றும் தகுதிகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு