Skip to main content

மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை


மின் கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின்
கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும் தொகையை மூன்றால் பெருக்க வேண்டும். இவ்வாறு வரும் எண்ணை தனியாக வைத்து கொள்ள வேண்டும். பின், இருப்பில் உள்ள வைப்பு தொகைக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்து அதில் வரியை கழிக்க வேண்டும். இதில் ஒரு எண் கிடைக்கும். இதையடுத்து இரண்டு தனி எண்களையும் கழித்தால் வர கூடியது, கூடுதல் காப்பு வைப்பு தொகை. ஏற்கனவே உள்ள வைப்பு தொகையுடன் ஒப்பிடும்போது கூடுதல் வைப்பு தொகை குறைவாக இருந்தால் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை. இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்சாலைக்கு ஆண்டுதோறும்; குடியிருப்புக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரம் மின் நுகர்வோரின் ஆண்டு மின் பயன்பாடு கணக்கின் அடிப்படையில் வசூல் செய்யப்படும்.கூடுதல் காப்பு தொகை வசூலிக்கும்போது மின் பயன்பாடு அதிகரித்திருந்தால் கூடுதல் தொகை; மின் பயன்பாடு குறைந்திருந்தால் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும். இதை மின் நுகர்வோர் மூன்று தவணைகளில் செலுத்தலாம். இந்த விவரம் மின் கட்டண மையங்களில் மின் கட்டணம் செலுத்தும்போது வழங்கப்படும் ரசீதில் தெரிவிக்கப்பட்டு ஏப்., மே மாதங்களில் கூடுதல் வைப்பு தொகை வசூல் செய்யப்படும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு