Skip to main content

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?


வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை பின்வரும் வழிகளில் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.
* தமிழக தேர்தல்துறையின் இணையதளம் (www.elections.tn.gov.in) http://electoralsearch.in/search.jsp மூலம் ஆன்லைனில் பதிவு
செய்யலாம்
* தேர்தல் துறையின் இ-மெயில் முகவரிக்கு (ceo@tn.gov.in) தகவ
ல் அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம்
* 51969 என்ற எண்ணுக்கு ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி பதிவு செய்யலாம்.
* 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து பதிவு செய்யலாம்.
* குறிப்பிட்ட படிவத்தில் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை குறிப்பிட்டு ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து தாலுகா அலுவலகங்களில் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பிற்பகல் நேரில் சமர்ப்பிக்கலாம். விரைவில் வீடு வீடாக வருகை தரவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் நேரில் படிவத்தை ஒப்படைக்கலாம்.
கூடுதல் விவரங்களால் என்ன பயன்?
வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதால் கிடைக்கும் முக்கியமான பயன்கள் வருமாறு:
* வாக்குப்பதிவு தொடர்பான விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்
* முகவரி மாற்றத்தை ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
* வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடலாம்.
* பூத் சிலிப் ஆன்லைனில் வழங்கப்படும்
* வாக்காளர் விருப்பம் தெரிவிக்காமல் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க முடியாது
* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் ஏற்படும் புதுமைகளை வாக்காளர்கள் பெற முடியும்
* ஆதார் எண் இணைக்கப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு