Skip to main content

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும்



ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .
புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்
ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும். 

ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் வகுத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் இல்லை. எனவே, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் கல்வி படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதி வந்தனர். புதுச்சேரியில் இதுவரை 400 டி.டி.எட்.,பட்டயஆசிரியர்களும், 350 பி.எட்.பட்டதாரி ஆசியர்களும் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் பணி கனவில் உள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி இயக்ககம், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்ணில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனி, நான்கு பிராந்தியங்களிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., திட்டத்தின் கீழ், (CTET) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள 180 மதிப்பெண்களில், பொதுப்பிரிவினர்-90 மதிப்பெண், எம்.பி.சி., மீனவர், ஓ.பி.சி., முஸ்லிம் பிரிவினர்-82, எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகள்-75 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றிப்பெற்றதாக கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தரமான கல்வியை வழங்குவதற்காக, நான்கு பிராந்தியங்களிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆங்கில மீடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு வரையிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வினை இனி சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திடீர் மாற்றம் ஏன்?

ஏனாமில் ஆசிரியர் கல்வி படித்தவர்கள், ஆந்திர கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி வந்தனர். ஆந்திர அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினையே வேலைவாய்ப்பிற்கான தகுதியாக எடுத்துக்கொண்டதால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏனாம் பகுதியில் ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகளை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்தது.இதனால் தெலுங்குமொழியை தாய்மொழியாக கொண்டு பாடம் படித்த ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் எங்கும் தகுதி தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதேபோல், ஒவ்வொரு மாநிலமும் புதுச்சேரியை கழற்றிவிட்டால் எதிர்காலத்தில் புதுச்சேரி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துவது சிக்கலாகிவிடும் என, கருதி தற்போது ஒரே மாதிரியான தகுதி தேர்வு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு