Skip to main content

பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்:

பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்: சுகாதாரத்துறை செயலர் தகவல்
சென்னை: ''தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்; பாதிப்புள்ள மாணவர்கள், 'டாமி' புளூ மாத்திரை போட்டு தேர்வு எழுதலா
ம்; எந்த சிக்கலும் இல்லை,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு, இதுவரை, அரசு கணக்குப்படி, 11 பேர் இறந்துள்ளனர். நேற்று, தாராபுரத்தில் ஒருவர் இறந்துள்ளார். 'பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மாணவர்களுக்கு உள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்' என, பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் அளவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இந்த நிலையில், சென்னை, கிண்டி, 'கிங்' ஆய்வு மையத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.



பின், சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில், பீதி ஏற்படுத்தும் வகையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. தமிழகத்தில், ஜனவரி மாதம் முதலே தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தால், கட்டுக்குள் உள்ளது. வட மாநிலங்களில் இருந்து வருவோர், அங்கு சென்று வருவோரால் தான் பாதிப்பு உள்ளது. நாடு முழுவதும், 21,000 பேர் பாதிக்கப்பட்டதில், 1,158 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், மொத்த பாதிப்பு, 319 பேருக்கு மட்டுமே. 187 பர் வீடு திரும்பி விட்டனர்; 11 பேர் இறந்துள்ளனர். இதில், இரண்டு பேர் தானாக மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டதும், மூன்று பேர் தாமதமாக சிகிச்சைக்கு வந்ததும் காரணம். பாதிப்பு, இந்திய அளவில், ஒரு சதவீதம் கூட இல்லை; இருந்தபோதிலும், இறப்பு ஏற்படக்கூடாாது என்பதில், அரசு கவனமாக உள்ளது. பீதி அடையும் வகையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை; நிலையை கட்டுக்குள்தான் இருக்கிறது. நான்கு லட்சம் 'டாமி' புளூ மாத்திரைகள்; 50 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கேட்டால், இலவசமாக தர தயாராக உள்ளோம். தும்மல், இருமல் பட்ட இடத்தைத் தொட்டுவிட்டு, அப்படியே கை கழுவாமல் விட்டுவிடுவது நல்லதல்ல. சோப்பு போட்டு, சுத்தமாக கைகழுவ வேண்டும். இதுகுறித்து, மாணவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காய்ச்சல் பாதிப்பு இருந்தால், 'டாமி புளூ' மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; அதில், எந்த சிக்கலும் இல்லை; அதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது. அப்படி பாதிப்பு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. சென்னை, கோவை போன்ற நகரங்களில் பாதிப்பு இருந்தாலும், கிராமப்புறங்களில் எந்த பாதிப்பும் இல்லை. வெயில்காலம் வந்தால் பாதிப்பு குறைந்து விடும். காய்ச்சல் வந்தால், மருத்துவமனை செல்லுங்கள். தேவையற்ற பீதி வேண்டாம்;வதந்திகளையும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால்...மீறினால் நடவடிக்கை!

தமிழகத்தில், ஆறு மையங்களுடன், புதுவை, 'ஜிப்மர்' என, ஏழு அரசு பரிசோதனை மையங்களும், 14 தனியார் மையங்களும் உள்ளன. தனியார் மையங்கள், 3,750 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அறிவுறுத்தினோம்; அதற்கு மேல் வாங்க மாட்டோம் என, உறுதி அளித்துள்ளனர். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். 'கிங்' ஆய்வு மையத்தில், காலையில் கொடுத்தால், மாலையே முடிவுகள் தரப்படுகிறது. 48 மணி நேரம் காத்திருப்பு எல்லாம் இல்லை. 'பயோ செக்யூரிட்டி' காரணங்களால், இஷ்டம்போல் மையங்களை திறக்க முடியாது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு