Skip to main content

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்:

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற
மெட்ரிக் மாணவர்களுக்கு எளிமையாகவும் இருந்தன. தேர்வில், நான்கு மாணவர் உட்பட, 74 பேர் முறைகேட்டில் சிக்கினர்.

பாடப் புத்தகத்தில்:

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 53 வினாக்கள் தரப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்தும், பாடத் திட்டத்தின் படி மாற்றியும் கேட்கப்பட்டிருந்தன. ஐந்தாவது வினாவில், 'சி.ஓ.டி., - காட்' என்ற பிரிட்டிஷ் ஆங்கில சொல்லுக்கு, இணையான அமெரிக்கன் ஆங்கில சொல் கேட்கப்பட்டிருந்தது. இதை கிராமப்புற 
மாணவர்களால் சரியாக எழுத முடியவில்லை. இதேபோல், 19, 20, 21, 22, 42 மற்றும், 43வது கேள்விகள், மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தன. மேலும், 'இடம் பெற்றுள்ள பிழைகளை சரி செய்' என்ற, 52வது வினாவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. மெட்ரிக் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்றுள்ளதால், அவர்களுக்கு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், 53வது வினாவில், போக்குவரத்து விதிமீறல் குறித்து படம் ஒன்றைக் கொடுத்து, ஐந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எத்தனை வகை வாகனங்கள் படத்தில் தெரிகிறது என, கேட்கப்பட்டிருந்தது. படத்தில் கார், ஆட்டோ, மோட்டார் பைக் மற்றும் மொபட் வகை வாகனங்கள் இருந்தன.

மதிப்பெண் தர வேண்டும்:

விடையில், இருசக்கர வாகனத்தின் இரு வகைகளும் குறிப்பிட வேண்டுமா அல்லது அனைத்தை யும் ஒரே வகையாக குறிப்பிட வேண்டுமா என்ற குழப்பம் இருந்ததாகவும், இதில் எப்படி குறிப்பிட்டாலும் மதிப்பெண் தர வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தேர்வில், 74 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். நான்கு பேர் மாணவர்; 70 பேர் தனித்தேர்வர்கள். அதிகபட்சமாக கடலூரில், 43 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா