Skip to main content

கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை: இயக்குநர் அலுவலகம் உத்தரவு


உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி நடத்தத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி
இயக்குநர் அலுவலகமும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகமும் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லட்சிமி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தொடர்ந்த வழக்கு விவரம்:

தனியார் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கும் எனது மகள், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "டெகோஃபெஸ்' கலாசார விழாவில் நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தப்படி அவருக்குப் பரிசுகள் எதுவும் தரவில்லை. பங்கேற்புச் சான்றிதழ் மட்டும் கொடுத்தனர். அதுவும் போலி எனத் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே, உரிய நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நிர்வகிக்கும் கல்லூரி கலாசார நிகழ்ச்சியில் சிறந்த ஆணழகன் அல்லது அழகி யார் எனத் தேர்ந்தெடுப்பது தேவையானதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கலாசார நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்க இந்த நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், பல்கலைக்கழகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கவனிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எதாவது வழிமுறைகள் வழங்கியுள்ளதா, பல்கலைக்கழகத்தின் எந்த அதிகாரி இவற்றைக் கண்காணிக்கிறார், நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பன உள்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. அதுவரை, இது போன்ற அழகன், அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் அல்லது இது போன்ற போட்டிகள் நடத்தக் கூடாது என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தமிழக உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் உடனடியாகச் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. அதில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

எனவே, கல்லூரி வளாகம், பல்கலைக்கழக வளாகங்களில் ஆணழகன், அழகிப் போட்டி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு