Skip to main content

"பென்டா' செல்லிடப் பேசிக்கு மக்களிடையே வரவேற்பு


அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் "பென்டா' செல்லிடப் பேசிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக மதுரை தலைமை தபால் நிலைய முதுநிலை அதிகாரி என். பிரகாஷ் தெரிவித்தார்.
"பென்டா பாரத்' நிறுவனமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் அஞ்சல் துறையுடன் இணைந்து பாரத் மொபைல் எனும் செல்லிட பேசி
விற்பனையை மதுரை மற்றும் தென் மண்டலங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.
ரூ.1999 மதிப்புள்ள இந்த செல்லிடபேசியில் கட் செவி அஞ்சல், கேமரா, இணைய வசதி போன்ற பல சேவைகள் உள்ளன. மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்திய அளவில் மற்ற பிஎஸ்என்எல் மொபைல்களுக்கு 1999 நிமிடம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

இதுகுறித்து மதுரை ஸ்காட் ரோட்டிலுள்ள தலைமை தபால் நிலைய முதுநிலை அதிகாரி என். பிரகாஷ் கூறியது:
தபால் நிலையங்களில் செல்லிடப்பேசி விற்பனைக்கு மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. மதுரையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால் நிலையங்கள் சேர்த்து மொத்தமாக 19 தபால் நிலையங்களில் செல்லிடப்பேசிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் மக்களின் வரவேற்பைப் பொறுத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 50 செல்லிட பேசிகள் மட்டுமே மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இத்திட்டம் தொடங்கிய முதல் வாரத்திலேயே அனைத்து செல்லிடப்பேசிகளும் விற்றுத் தீர்ந்தன. செல்லிடபேசிகள் இருப்பு குறையும் போது சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து ஒவ்வொரு மண்டலத்தின் தேவையைப் பொருத்து செல்லிடபேசிகள் அனுப்பப்படும்.
மக்களும் இதில் அதிக ஆர்வம் காட்டுவதால் செல்லிடபேசிகளுக்கான முன்பதிவுத் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். தபால் நிலையங்களில் செல்லிடபேசிகள் இருப்பு குறையும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணம் செலுத்திவிட்டுச் சென்றால் 5 நாள்களுக்குள் செல்லிடபேசிகள் அளிக்கப்படும் என்றார்.
தென்மண்டலங்களில் செல்லிடப்பேசிகள் விற்பனையைத் தொடங்கி 25 நாள்கள் ஆன நிலையில், இதுவரை மதுரையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட செல்லிடபேசிகள் விற்பனையாகியுள்ளன. தென் மண்டலங்களில் மொத்தமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான செல்லிடப்பேசிகள் விற்பனையாகியுள்ளன என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு