Skip to main content

அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு பிரபல ஓவியர் மூலம் ஒரு நாள் பயிற்சி


சேலம் மாவட்ட அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு, பிரபல ஓவியர் மூலம், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், ஓவிய ஆசிரியர் பணியிடங்களும், அதற்கான பாட
நேரமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட தனித்தனி பாடவாரியாக, பல்வேறு திட்டங்களின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஓவிய ஆசிரியர்களுக்கும், ஒரு நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், மார்ச், 14ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 4 மணி வரை, சேலம் ஸ்வர்ணபுரி வி.எம்.கே., அண்டு வி.எம்.ஜி., திருமண மண்டபத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில், தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வம் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கிறார். இதில், அரசு, நகரவை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், அனைத்து வகை ஓவிய ஆசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா