Skip to main content

பயணிகள் வாட்ஸ்அப்பில் புகார்களை அனுப்பலாம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு


ரயில் பயணிகள் தங்கள் பிரச்னைகளை புகார்களாக எஸ்எம்எஸ் மூலமாக மட்டுமின்றி, வாட்ஸ்ஆப், இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்
வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புகார் மேலாண்மை சேவையை ரயில்வே தலைமை அலுவலகமான ரயில்பவனில் தொடங்கி வைத்தார். அதன் மூலம் பல்வேறு வகைகளில் பயணிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,
ஆன்ட்ராய்டு மென்பொருள் உள்ள செல்போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். ரயில் பயணத்தின்போது புகார் தெரிவிப்பவர்கள் பிஎன்ஆர், வண்டி எண், ரயில்நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் புகார் தெரிவிக்கலாம், கோட்டம், மண்டல வாரியாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மட்டுமின்றி ஆலோசனைகளையும் தரலாம். வாட்ஸ்ஆப் மூலம் இந்த சேவையை பெற www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் அல்லது 97176 30982 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இணைய தளம் மூலமாக புகார் தெரிவிக்கும் வசதி உள்ளவர்கள், விரும்புபவர்களும் இந்த www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தையே பயன்படுத்தலாம். புகார், கருத்துகளை பரிமாற ஏற்கனவே மண்டல வாரியாக ஃபேஸ்புக் வசதி உள்ளது. இந்த எந்த வசதியும் இல்லாதவர்கள் 97176 30982 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக புகார் அனுப்பலாம். மேலும், 138 என்ற 24 மணி நேர உதவி மைய எண்ணை தொடர்புக் கொண்டு குரல்பதிவு மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்