Skip to main content

வேலை வாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு


தமிழகம் முழுவதும், 43 லட்சம் பெண்கள் உட்பட, 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க
வேண்டும். பல்வேறு சிக்கல்கள், கவனக் குறைவால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், வேலைவாய்ப்பகங்கள் பட்டியலில், 10 லட்சம் பேர் வரை குறைந்து உள்ளது. புதுப்பிக்க தவறி, பதிவு மூப்பை இழந்து விடுவதால், தகுதியிருந்தும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இது போன்று, 2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, அரசு சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. விடுபட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணையதளம் வாயிலாகவும் புதுப்பித்து வருகின்றனர். 'அரசின் சிறப்புச் சலுகை முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், புதுப்பிக்கத் தவறியோர் வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்; மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.