Skip to main content

உலகின் முதல் சோலார் விமானம் இந்தியா வந்தது

உலகின் முதல் சோலார் விமானம், இந்தியாவில் தரையிறக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், 120 கோடி இந்திய மக்களிடம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவித்து அதன் மூலம், உலக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலுப்பெறச் செய்வதேயாகும் என, விமானிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலாக, எரிபொருள் உதவியின்றி முற்றிலும் சூரிய ஒளியில்
இயங்க கூடிய, 'சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்.ஐ., - 2)' விமானம், ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, சுவிட்சர்லாந்தை சேர்ந்த, பெர்ட்ரண்ட் பிக்கர்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த சோலார் விமானம், அபுதாபியிலிருந்து, 5 மாதம் கால இடைவெளியில் உலகம் முழுவதும் சுற்றி வர உள்ளது. கடந்த திங்களன்று அபுதாபியிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், ஓமன், மஸ்கட்டை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட விமானம், அரபிக்கடலின் மேல், 1,465 கி.மீ., பயணம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள் போர்ஸ்பெர்க் மற்றும் பிக்கர்டு ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிக்கர்டு கூறியதாவது:

'சோலார் இம்பல்ஸ் 2' விமானத்தின் இறக்கைகளில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, விமானத்தின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த விமானம் உலகம் முழுவதும் ஓட்டிச் செல்லப்பட உள்ளது. அடுத்தகட்டமாக, இந்த சோலார் விமானம் வாரணாசி செல்ல உள்ளது. பசிபிக் பெருங்கடலை தாண்டும் முன்பாக, 35 ஆயிரம் கி.மீ., பயண தூரத்தில், சீனா மற்றும் மியான்மர் உள்ளிட்ட, 12 நகரங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. வறுமை ஒழிப்பு, மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இதில் அடங்கும். இவை குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, எஸ்.ஐ., - 2 விமான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கென, தனி இணையதளம் ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. இந்த பயண திட்டம் வெற்றிகரமாக அமைய, இந்தியாவில் உள்ள, 120 கோடி மக்களும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பருவநிலை மாற்றம் என்ற விஸ்வரூப பிரச்னைக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு