Skip to main content

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்

வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒன்று முதல் பத்து வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும்
பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் (2015-16) பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழிப் பாடம் கற்றலை 1-ஆம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, 1-ஆம் வகுப்பு தமிழ் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை, மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.

யார் யார் எங்கு வாங்கலாம்?: சென்னை வட்டார அலுவலகமானது, வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்தில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை வட்டார அலுவலகத்தில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம். 1 ஆம் வகுப்பு தமிழ் பாடநூலின் விலை ரூ.60.

வட்டார அலுவலகங்கள் முகவரி: மதுரை: பாண்டியன் சூப்பர் மார்க்கெட், செந்தாமரை கிடங்கு, முடக்கு சாலை, தேனி சாலை, மதுரை, தொலைபேசி-0452-2381484, செல்லிடப்பேசி: 9894057786.

சென்னை: வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகில், திருவான்மியூர், சென்னை, தொலைபேசி-044-22541326, செல்லிடப்பேசி: 9962478471, 9566116271.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு