Skip to main content

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விரைவில் ரெகுலர் படிப்புகள் அறிமுகம்

தொலைதூரக்கல்வி மற்றும் பகுதி நேரம் மூலமாக தற்போது பல்வேறுபடிப்புகளை வழங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விரைவில் ரெகுலர் முறையில் பட்டமேற்படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகம் கடந்த 2002 முதல் செயல்
பட்டு வருகிறது. கலை, அறிவியல், நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல்வேறு இளங்கலை, முதுகலை படிப்புகளையும், சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளையும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் வழங்கி வருகிறது. மேலும், பகுதி நேர எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விரைவில் ரெகுலர் முறையில் கலை அறிவியல் பாடங் களில் பட்டமேற்படிப்புகளை கொண்டுவர தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து பல் கலைக்கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பகுதி நேர எம்.ஃபில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளைத் தொடர்ந்து விரைவில் ரெகுலர் முறையில் முதுகலை படிப்புகளை தொடங்க உள்ளோம். இன்றைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய படிப்புகள் அமைந்திருக்கும்.

சிண்டிகேட் கூட்டத்தில் புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் பெறப்படும். பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) 12-பி அந்தஸ்து கிடைக்கப் பெற்றால்தான் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, ஆராய்ச்சி நிதி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளின் நிதி உதவிகளைப் பெற முடியும். பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விரைவில் யுஜிசி 12-பி அந்தஸ்து கிடைத்துவிடும். மேலும், தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்.எட். (பொது) படிப்பு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு