Skip to main content

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது; மாணவர் சேர்க்கை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு


இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி விவகாரம்
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தொடர்ந்து நடத்தப்போவதில்
லை என்று தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகம் (இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன்) கடந்த ஜனவரி மாதம் 5–ந் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.


இதற்கிடையில், மருத்துவ கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க இ.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் 10–ந் தேதி சென்னை வந்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மத்திய இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாவிடம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனு கொடுத்தனர்.

தமிழக அரசு கடிதம்
இந்த பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 11–ந் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், ‘‘இ.எஸ்.ஐ. நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவும், அங்கு மேலும் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த கடினமான முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் அதிர்ச்சியை போக்குவதற்காக சென்னை மற்றும் கோவையில் இயங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரை ஏற்க செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

மூடப்படாது
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்குமா? என்றும், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன ஆகும்? என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் மூடப்படாது என்றும், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய துணை மருத்துவ ஆணையர் டாக்டர் விவேக் ஹண்டா, சென்னை, பெங்களூரு, கொல்கத்தாவில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளின் முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மாணவர் சேர்க்கை நடைபெறும்
இந்த கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஆணையை வரவேற்கிறோம். மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கல்லூரி தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும் பரிசீலனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கல்வி ஆண்டு 2015–16–க்கான மாணவர் சேர்க்கைக்கான மத்திய மற்றும் மாநில அளவிலான ஒதுக்கீடுகள் தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வானதி சீனிவாசன்
இந்த தகவலை சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நேற்று தெரிவித்தார். இதையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.

இந்த நல்ல முடிவை எடுத்த மத்திய அரசுக்கும், மகிழ்ச்சியுடன் தெரிவித்த வானதி சீனிவாசனுக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு