Skip to main content

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தேர்வு வாரியம் குளறுபடி: பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு
உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) குளறுபடியை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி உரிய உத்தரவைப் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டியம்மாள் தாக்கல் செய்த மனு வி
வரம்:
வரலாறு பாடத்தில் எம்.ஏ., எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. படித்துள்ளேன். போடிநாயக்கனூர் கல்லூரியில் தாற்காலிக விரிவுரையாளராக 1993 இல் 4 மாதங்களும், 2002 முதல் 2007 வரையிலும் பணியாற்றினேன். 2013 இல் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஓராண்டு விரிவுரையாளர் அனுபவத்துக்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதன்பிறகு வெளியிட்ட திருத்த அறிவிப்பில், பட்டம் அல்லது பிஹெச்.டி. படித்துக் கொண்டிருக்கும்போது விரிவுரையாளராகப் பணியாற்றி இருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருத்தத்தை எதிர்த்து சந்திரசேகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அறிவிப்பை ரத்து செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) தகுதி பட்டியல் அடிப்படையில் பணி அனுபவத்தை நிர்ணயிக்க உத்தரவிட்டது. இந்தப் பட்டியலின்படி எனக்கு 12 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 3 மதிப்பெண்களே வழங்கப்பட்டது. இதை ரத்து செய்து, மதிப்பெண்களை உயர்த்தி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, யூஜிசி நிர்ணயித்த தகுதிகளில் 5 ஆவது அட்டவணைப்படி, 2006 ஆம் ஆண்டு முதல் அனுபவம் கணக்கிடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, பணி அனுபவம் தொடர்பான திருத்தத்தை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது. மேலும், யூஜிசி நிர்ணயித்த தகுதிப் பட்டியலை பணி அனுபவத்துக்கான அளவீடாகத் தேர்வு வாரியம் பின்பற்றியுள்ளது. ஆனால், அதில் அனைத்து தகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்க, 4 ஆவது அட்டவணையில் 31.2.2002-க்கு முன்பு எம்.ஃபில். படித்திருக்க வேண்டும் என்ற ஒரு பகுதி மட்டும் அதிசயமாக விடுபட்டுள்ளது.
இதனால், 5 ஆவது அட்டவணை அடிப்படையில் 2006 லிருந்து பணி அனுபவத்தை தேர்வு வாரியம் கணக்கிட்டுள்ளது. மேலும், 4 ஆவது அட்டவணையில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது குறித்த மனுதாரரின் கேள்விக்கு டிஆர்பி விடையளிóக்கவில்லை. எனவே, 4 ஆவது அட்டவணையில் ஏற்பட்ட தவறை சரிசெய்து, மனுதாரருக்கு 2002ஆம் ஆண்டிலிருந்து பணி அனுபவம் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கி, 8 வாரங்களில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு