Skip to main content

தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி


ஓசூரில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில்
, கடந்த, 18ம் தேதி நடந்த பிளஸ்2 கணித தேர்வில், தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த, ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கணித வினாத்தாளை, மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்தனர். அதை, சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பினர். இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் பணியாற்றி வந்த தனியார் பள்ளியில், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய, 68 ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக, நாளை நடக்கும், பிளஸ் 2 தேர்வுக்கு, ஓசூர் தனியார் பள்ளி யில் உள்ள, 44 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 88 ஆசிரியர்களும், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் உள்ள, 25 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 50 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆசிரியர் பயிற்றுனர்களும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், நாளை நடக்கும் தேர்வு முடிந்த பின், மீண்டும் மாற்றப்படுவர் என, சி.இ.ஓ., ராமசாமி தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா