Skip to main content

அரசு ஊழியர் அனுபவங்களை பகிர 'அனுபவ்' இணையதளம் துவக்கம்


அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள, மத்திய அரசு ஊழியர்கள்,
தங்களின் பணிக்காலத்தில் செய்த நல்ல பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை
அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்காக, 'அனுபவ்' என்ற, இணையதளத்தை துவக்கி உள்ளது. இந்த இணையதளத்தில், மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் பணிக்காலத்தில் மேற்கொண்ட பாராட்டத்தக்க பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

குறிப்பாக, அடுத்த ஆறு மாதத்தில், ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களின் அனுபவங்களை, 5,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தகுந்த ஆவணங்களுடன், 'அனுபவ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மத்திய அரசில், பல்வேறு துறைகளில் பணியாற்றும், 437 அதிகாரிகள், அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். இவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அது அவர்களுக்கு திருப்தி அளிப்பதோடு, பணியில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் ஒரு துாண்டு கோலாக அமையும். மேலும், தேசிய கட்டமைப்புக்கும், அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் என, மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா