Skip to main content

தோட்டக்கலை அலுவலர் பதவி 605 பேருக்கு அழைப்பு


சென்னை:தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 605 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 30ம் தே
தி சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வேளாண் பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான, 183 காலியிடங்களுக்கு, 2014 மார்ச், 16ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில்,
659 தேர்வர்கள் பங்கேற்றனர். இதில், விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்களின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட உள்ளது.

இதற்கான, 605 விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. வரும், 30ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும்.குறிப்பிட்ட நாளில், உரிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளத் தவறினால், அடுத்த கட்ட தெரிவு நிலைக்கு,
அந்த விண்ணப்பதாரர் தகுதியை இழந்தவராகிறார்.

மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே, அடுத்த கட்ட நிலைக்கு செல்ல உரிமை உண்டு எனக் கோர இயலாது. எனவே, தவறாமல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு