Skip to main content

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56
ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது; இந்த நடைமுறை, இந்தாண்டு முதல் அமலுக்கு
வருகிறது.
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், அனுபவம், செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்ளப்படுவது வழக்கம். இதற்கான அதிகபட்ச வயது வரம்பு, 54 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மாநில அரசுகளில் பணிஆற்றும் சில அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'மத்திய அரசுபணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் கீழ் பணியாற்றி வரும் அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ப்பதற்கான வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் நல அமைச்சகம் ஆகியவை ஆய்வு செய்து, மாநில அரசு அதிகாரிகளை சேர்த்து கொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, 56 ஆக அதிகரிப்பதாக அறிவித்தன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா