Skip to main content

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56
ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது; இந்த நடைமுறை, இந்தாண்டு முதல் அமலுக்கு
வருகிறது.
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், அனுபவம், செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்ளப்படுவது வழக்கம். இதற்கான அதிகபட்ச வயது வரம்பு, 54 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மாநில அரசுகளில் பணிஆற்றும் சில அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'மத்திய அரசுபணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் கீழ் பணியாற்றி வரும் அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ப்பதற்கான வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் நல அமைச்சகம் ஆகியவை ஆய்வு செய்து, மாநில அரசு அதிகாரிகளை சேர்த்து கொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, 56 ஆக அதிகரிப்பதாக அறிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்