Skip to main content

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி 54 மையங்களில் இன்று தொடங்குகிறது


கேரளாவில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி 54 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 964 மையங்கள் மூலம், மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 495 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, மாவட்ட வாரியாக மலப்புரம் மாவட்டத்தில் அதிகமாகவும், வயநாடு மாவட்டத்தில் குறைவாகவும் இருந்தது. அதிகபட்சமாக மலப்புரம் இடரிக்கோடு வி.கே.எம். பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்து விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தேர்வு கட்டுப்பாட்டு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இன்று தொடங்குகிறது
அந்த விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் 54 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இதில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 2½ மணிநேரம் நடந்த தேர்வுக்கானது எனில் 18 விடைத்தாள்களும், 1½ மணி நேரம் நடந்த தேர்வுக்கானது எனில் 12 விடைத்தாள்களும் தினசரி வழங்கப்பட உள்ளது. அவற்றை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். தினமும் மதிப்பீடு செய்யும் விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்களை கணினியில் பதிவு செய்யும் வசதி 54 மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி ஆகும்.

16-ந் தேதி முடிவுகள்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேரளாவில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இந்த பணி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறும். அதன்பின்னர் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்து ஏப்ரல் 16-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு