Skip to main content

உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு க
ட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் அடங்கிய நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் மற்றும் தட்டச்சர் பதவிகளில் காலியாக உள்ள 268 பணி இடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23–ந் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 27 ஆயிரத்து 983 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
தட்டச்சர் பணிக்கு திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 383 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலையை பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என தெரிய வந்தால் அடுத்தகட்ட நிலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா