Skip to main content

மாநில இளைஞர் விருது: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்

"முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு' ஏப்ரல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.இதுகுறித்து சென்னை மாவட்ட விளையாட்டு
அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளர்ச்சிக்குச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில்,"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதுக்கு 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர், இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தையும், சென்னை மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தையும் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா