Skip to main content

மாநில இளைஞர் விருது: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்

"முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு' ஏப்ரல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.இதுகுறித்து சென்னை மாவட்ட விளையாட்டு
அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளர்ச்சிக்குச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில்,"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதுக்கு 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர், இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தையும், சென்னை மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தையும் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்