Skip to main content

பிளஸ் 2' பொதுத்தேர்வு துவக்கம்: போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு


மதுரை: 'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) துவங்குகிறது. இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்வு காலம் என்பதால் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர் நலன் கருதி மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் வட்டார போக்
குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.


இதில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு அளித்த உத்தரவு:

இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை காண்பிக்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளி சீருடை அணிந்திருந்தால் போதும். சீருடை அணிந்த மாணவர்கள் பஸ் ஸ்டாப் தவிர்த்து உதவி கேட்டால் பஸ்சில் ஏற்றி கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நாள் வரை தேவையான பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களை இயக்கக்கூடாது. விதிமுறை மீறும் டிரைவர், கண்டக்டர்கள் குறித்து அருகில் உள்ள டிப்போக்களில் வண்டி எண், தடம் எண், நேரம், சம்பவ இடம் குறித்து புகார் கூறலாம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்