Skip to main content

குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை


குரூப் 2 தேர்வு மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமல்லாது, வருவாய்த் துறையின் கீழ் வரும் எந்த அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அந்
த பணிக் காலமும் பதவி உயர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மூலம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் நேரடி நியமன உதவியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால், அவர்களில் பலர் பதவி உயர்வுக்கான பயிற்சியை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைக் களையும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கோரிக்கை மனு: துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நில அளவைப் பயிற்சி, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் பணி, இரண்டாண்டுகள் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பணி ஆகியவற்றை முடித்திருந்தாலே அவர்களை துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வுக்கான புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.
பதவி உயர்வுக்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மட்டுமே வருவாய் உதவியாளர் பணியை ஒன்றரை ஆண்டுகள் வரை மேற்கொள்ள வேண்டும் என இருந்தது.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியாற்றுவோர் மட்டுமே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள முடிகிறது. வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அலகைச் சேர்ந்த இதர அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பயிற்சியை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
எனவே, இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. இதற்குப் பதிலாக, ஒன்றரை ஆண்டுகள் பயிற்சிக் காலமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வருவாய்த் துறையில் மாவட்ட வருவாய் அலகிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிடப்படுவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்