Skip to main content

+2, டிப்ளமோ தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி


ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திரும
ணமாகாத இருபாலர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

காலியிடங்கள்: 435

பணி: Trainee Cabin Crew

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்