Skip to main content

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்பது கடினம்

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்பது கடினம்: தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கருத்து
ராமநாதபுரம்: நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 'சென்டம்' எடு
ப்பது கடினம் என தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கூறினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. இதில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், பல கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினர்.

ஏ.ஜே.பிரதாப்சிங், கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி: வேதியியல் தேர்வில் பல கேள்விகள் எதிர்மறையாக கேட்கப்பட்டிருந்ததால் புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தது. ஒரு மார்க் வினாவில் 2 வது கேள்வி தவறாக இருந்தது. மேலும், 30 ஒரு மார்க் கேள்விகளில் 5 வினாக்கள் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுத்தேர்வில் கேட்கப்படாததாகவும், கடினமாகவும் இருந்தது. இந்த முறை 'சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.


வி.புவனேஷ் ராம், மாணவர், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் கேள்விகளில் 1, 22 வது வினாக்கள் முதல் முறையாக இப்போது கேட்கப்பட்டிருந்தன. 3 மதிப்பெண் வினாவில் 'ஆர்கானிக்' பாடத்தில் இருந்து கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மூலக்கூறுகள், சமன்பாடுகள் தீர்வு கடினமாக இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களில் 66 வது வினா குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சராசரி மாணவர்கள் 150 க்கு 110 மதிப்பெண்கள் வரை எடுக்கலாம்.

எஸ்.மகாலட்சுமி, கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி: கடந்த 5 ஆண்டு பொதுத்தேர்வுகளில் கேட்கப்படாத பல கேள்விக் கேட்கப்பட்டிருந்தன. 5 மார்க்கில் 54 மற்றும் 63 வது கேள்விகள் சுற்றிவளைத்து கேட்கப்பட்டிருந்ததால், சிறிது நேரம் யோசித்து பின்னர் விடை எழுதினேன். 3 மார்க் வினாக்கள் ஓரளவிற்கு சுலபமாக இருந்தது. 10 மார்க் வினாக்கள் பரவாயில்லை. முக்கியமாக எதிர்பார்த்த பல கேள்விகள் வரவில்லை. புத்தகத்தை முழுமையாக படிக்காதவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

ஆர்.விவேகா, ஆசிரியை, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பாடத்திட்ட 'புளூ பிரின்ட்' படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களில் சராசரி மாணவர் 30க்கு 22 மதிப்பெண் எடுக்கலாம். புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் எளிதாக விடையளித்திருக்க முடியும். 3 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 45, 46, 47வது வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று கடினமானது. 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 10 மதிப்பெண் வினாக்களில் 66 வது வினாவைத் தவிர அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. நன்றாக படிக்கும் மாணவர் முழு மதிப்பெண் பெறலாம்,” என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்