Skip to main content

குரூப் - 2 பதவி நியமன குழப்பம்: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்


குரூப் - 2 தேர்வில் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான குழப்பத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.
எஸ்.சி., தெளிவுபடுத்தி உள்ளது.
குரூப் - 2 தேர்வில், வழக்கத்திற்கு மாறாக, 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதால், எந்த அடிப்படையில் இறுதித் தேர்வு நடக்கும் என்று, 5,635 தேர்வாளர்களும் குழப்பம் அடைந்தனர்.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட அறிவிப்பு:

தேர்வாணையத்தால், 2013, 2014ம் ஆண்டுகளுக்கான குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடந்தன. இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், ஒரு காலிப் பணியிடத்திற்கு, ஐந்து விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 26 முதல் மே 8 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதன் பின், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், 1:2 (ஒரு பதவிக்கு இருவர்) என்ற விகிதத்தில், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா