Skip to main content

பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...


பிளஸ்2 தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் பிளஸ்2 பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். இதில், செய்முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே 12,14,17,19 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிற செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இவர்களுக்காக அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் என்.எ.எ.மேல்நிலைப்பள்ளி, அதே ஊரில் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகரில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் தனித்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே இத்தேர்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள் 11-ம் தேதி கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களை அணுகி தங்களது பெயர் மற்றும் பாடங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு