Skip to main content

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்
அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி
விப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசித் தேதியாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அலுவலகங்களும், அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன.

இந்தக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக இருக்கும் 178 இணைப் பேராசிரியர் பணியிடங்களையும், 102 பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டியதோடு, 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருப்பதோடு, 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை www.annauniv.edu இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு