Skip to main content

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்

கடந்த 2013-14ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்ட உதவியாளர்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 346 பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறையில் உதவியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 21ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் கவுன்சலிங் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையபட்டியலின் வரிசை எண்படி கவுன்சலிங் நடக்கும். மேற்கண்ட நபர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அப்போது டிஎன்பிஎஸ்சி வழங்கிய துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்